கோமணந்தான் மிச்சமாச்சு.
ஒன்னுமே மிஞ்சல.
களைச்சி இளைச்சி ஓஞ்சிட்டேன்
காலாற நேரமில்ல.
ஏழையாகப் பிறந்தேனோ!
என்ன பாவம் செஞ்சேனோ!
விலைவாசி வேகத்தோட
வேலக்கூலி எட்டல.
கடைக்காரன் கடங்காரன்
கண்ணில் படக் கூசுது.
கஞ்சியாக் குடிச்சாக்கூட
காஞ்ச வயிறு பத்தல.
பிஞ்சுக் குழந்தைகள் பாவமோ!
செஞ்ச தென்ன கொடுமையோ!
என்னத்துக்கு இலவசம்
ஒன்னுத்துக்கும் ஆகல.
இலவசம் சொன்னாலே
விலைவாசி ஏறுது.
விவசாயத்துக்கு மானியம்,
விலை நிர்ணயம் செய்யாம;
அத்யாவசியப் பொரு ளெல்லாம்:
ஆகாததே ஏழைக்கு.
நல்ல படிப்பு வேணும்னா,
நல்ல மருத்துவம் வேணும்னா,
ஏழைக்கது எட்டாதது.
எல்லாத்துக்கும் துட்டானது.
விதியிருந்தா பொழச்சுக்கலாம்,
மதியிருந்தா படிச்சுக் கலாம்.
விலை கொடுத்து உரிமை வாங்கும்
காலாச்சாரம் ஆகிப் போச்சு.
துட்டுக்கு ஓட்டுணு கெட்டுப் போச்சு அரசியல்.
பிட்டுக்கு மண்சுமந்து பிள்ளைப் பசித் தீர்த்தப் பஞ்சம்,
முட்டுக்கும் எட்டாமல் முந்தானைக்கும் ஒட்டாமல்,
கட்டிக் கட்டி நஞ்சி போச்சி கோமணத்துக்கு மிஞ்சலாச்சி.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment