Sunday, 16 March 2025

கடவுட்துதி.

கடவுட்துதி.

அனைத்தும் கடந்து அதனுள் இருப்பவனே!
எனைத்தும் மறந்து
உனைத்தே என்னை
இணைத்தேன் கடவுளே!

இறைஞ்சி உன்னை இறைவா என்றேன்.
கரைந்து உன்னில் கலந்தே கொண்டேன்
மறைந்தேன் நானென உறைந்தேன் நீயென
பிறந்தேன் பிணியென பிறப்பினி வேண்டேன்.

நானா விரும்பி தாயிடம் அரும்பினேன்!
தானா மலர்ந்தும் தரணியில் விழுந்தேன்.
ஏனோ என்னை எதற்கோப் படைத்தாய்,
வீணோ நானோ விளையா வித்தோ!

போதும் போதும் புவியினி வாழ்க்கை,
ஏதுமிருந்தால் இதில்முடி கணக்கை.
யாதும் நடப்பது நின் திருவிளையாடல்.
வாதம் செய்வதால் எனக்கென்ன தேடல்?

கொ. பெ. பிச்சையா.
 




No comments:

Post a Comment