நீ என் சுவாசக் காற்றே!
நீ வாழ வேண்டுமே!
நீயே சக்தி!சாமி நானே!
நீயும் நானும் சேராவிட்டால்
ஏது காதல் பக்தி!!
இரண்டில் ஒன்று
எது குறைந்தாலும்
வரண்டு விடாதோ காதல்!
வரமாய் கொண்டேன்
வாழ்வில் கண்டேன்
வாழ்வோம் இனிதே சுபமே!
உலகம் நமது கையிலே
ஒப்படைத்தானே இறைவனே!
விலகும் பொருளோ
வீணே எதற்கோ!
திலகம் நீ மட்டும்
தேவை எனக்கே!
உயிர்கள் செய்வோம்!
பயிர்கள் வளர்ப்போம்!
உலகம் நிலைக்க
உன்னைக் காப்பேன்!
உறுதியில் இருப்பேன்!
உணர்விலிதுவே சத்தியமே!
இது ஒவ்வொரு இளஞனும்
இதயம் கொள்க!
புதுப் பிரளயம் தவிர்த்திட
பெண்ணினம் காக்க!
கொ.பெ,பி..அய்யா.
No comments:
Post a Comment