Sunday, 23 August 2015

கப்பலோட்டி.....குழந்தைப்பாடல்

கப்பலோட்டிய தமிழன் (குழந்தைப்பாடல்)

ஆகாயம் பொழியுதோ!
ஆச்சி வீடு ஒழுகுதோ!
காகிதக் கப்பல் ஒன்றும்
போகுதோ கடல் கண்டும்.

உனக்கு முன்னே ஒரு தமிழன்
தனக்கு லாபம் கருதாமல்
நிசமாக கப்பல் விட்டான்
சுதேசிணும் பேரிட்டான்.

தமிழர்களின் சரக்கேற்ற
தடை என்ற வெள்ளைக்கப்பல்
சுமையின்றி சோம்பியது
சுதேசிதான் ஓடியது.

உலகையே அடக்கினான்
களவானி வெள்ளையன்.
குலப்பிள்ளை தமிழன்
மடங்கவே இல்லை.

கலகக்காரன் என்றே பொய்த்தான்.
கைதியாக்கி சிறையில் வதைத்தான்.
ஓட்டப்பிடாரம் உலக நாதரின்
வீட்டுப்பிள்ளை என்பதை மறந்தான்.

செக்கிழுத்த செம்மல் யாரோ?
சொக்கி எழுந்த சிதம்பரனாரோ!
சுதந்திரக் காற்றின் சுவாசம்தானோ!
சுகம்தர வாழ்ந்த வ.உ.சி பேரோ!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment