Tuesday, 11 August 2015

மதுவை ஒழிபாபோம்.

ஒருங்கே ஒழிப்போம்!

குடிப்பது பாவம் குற்றம் என்றும்
தடுக்கும் சட்டமும் திருத்தாது--அது
உடலுக்கு கேடு என்பதை உணர்ந்தாலே
குடிக்கும் கூட்டமும் முளைக்காது.

மூடு மூடென போராடும் அவசரம்
தேடொரு தீர்வின் அவசியம்--ஒரு
நாடும் வீடென நடப்பினை அறிந்தும்
ஈடும் வேறொன்றும் வரையட்டும்.

கடையை மூடும் தடையின் பூட்டும்
குடியை மறக்க தடுக்காது---காலம்
பழகிய மயக்கம் விலகிட விளக்கம்
வழங்கிட சிகிச்சை வழிவேணும்.

தனியொரு பாடம் தளிரதன் இளமை
துவக்கம் முதலே பயிலணும்--பாவ
மதுவின் கேட்டை மனதில் நிறுத்த
புதுமைத் திட்டம் அறியணும்.

வள்ளுவன் பாடிய மதுவுண்ணா நெறியை
சுள்ளெனக் கூறியும் மீட்டுவோம்--மனிதன்
கண்படும் இடமெலாம் தென்பட விளம்பரம்
நன்பட நெஞ்சில் ஊட்டுவோம்.

அறிவினில் இயல்பாய் புரிதலே அல்லாது
வலுவினால் மதுவும் ஒழியாது-மதுவால்
அழியும் தீதை ஒழிக்கும் முயற்சி
பயிற்சயால் திருத்த பழக்கணும்

வருகிற ஆண்டின் வரலாறு தொடக்கம்
அரசின் மதுவும் அடக்கம்--வடிக்கும்
கள்ளம் முளைக்கும் கருவை ஒழிக்கும்
வல்லமை நிலைக்க உதவுவோம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment