Sunday, 20 September 2015

என்னடி சொல்லுவ சுச்சீ

என்னடி சொல்லுவ,"சீச்சீ"!

என்னடி சொல்லுவ,"சீச்சீ"--பின்னே
எதுக்கடிடி நீயும் பொம்பள!--அப்புறம்
ஏனடி நானும் ஆம்பள!--சேச்சே!
வீணடி பேச்சு தோப்புல

என்னடா சொல்லுவ,"சேச்சே"!--உனக்கு
தின்னுற அவசரம்!ஆம்பள!--இதுக்கு
பாவம் பார்த்தா  பொம்பள!--எனக்கு
பத்து மாசம் வயிற்றுல-

எட்டும் கிட்டே இருக்குதடி!--கை
பட்டும் தொட்டே பறிக்குமடி!--கொஞ்சம்
விட்டால் மூச்சும் அடங்குமடி!--போதுமே!
செத்தால் கூட யோகமே!

அடக்கம்தானே பெண்ணுக்கு--தப்பு
தடுக்கும் காவல் கற்புக்கு--சும்மா
மடக்கு கொஞ்ச நாளைக்கு.--பொறுத்திரு!
விருந்தும் நானும் படைப்பதற்கு.

புத்தி கெட்ட பயல் நானே--என்னை
பற்றியும் மட்டம் எண்ணாதே--உந்தன்
அழகில் மயங்கிய மோகத்தில்--காதல்
பிழை படப்பாவி துணிந்தேனே!

இயற்கையின் பரிசு காதலிது--இதை
இறையென உலகம் போற்றுவது--நாமும்
புனிதம் முயன்று தேறுவது--இனிதே
மனிதம் உயர்ந்து வாழுவது.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment