Monday, 24 August 2015

காமராஜ் குழந்தை பாடல்

கர்மவீரர் காமராசர்(குழந்தைப்பாடல்)

"அ"னா "ஆ"வனா-அது 
அரிச்சுவடிப் பாடம்.
"கு"னா "கா"வனா-இது 
படிச்சவங்க யோகம்.

படிக்கவைத்த காமராசர்--அன்று 
ஏற்றிவைத்த தீபம்.
விடிஞ்சதம்மா விளங்குதம்மா--இன்று
ஏழைக்குத்தான் காலம்.

சுத்தமான மனிதருக்கு--புகழ்
உத்தமராம் பேரு.
மத்தியான சோறு தந்தார்--திகழ்
சத்தியமா சாமி.

நாட்டுக்காக வாழ்ந்தவராம்--அந்த
நல்லவரைத் தேடு!
ஆற்றுத்தண்ணீர் தேக்கியவர்--நம்ம
அய்யா புகழ் பாடு.

களர் நிலம் கழனியாச்சு--ஏழை
உழவர்தொழில் வளமாச்சு
பழகுதமிழ் மொழிப்பேச்சு--சோலை
அழகு அவர் குணமாச்சு.,

படிக்காத மேதை என்றே--அவரை
பழகாதார் இழிப்பார்!
கிடைக்காத கீதை ஒன்றே--இவரை
படைத்தவனும் படிப்பான்.

எதிரியென எவருமில்லை.--கண்டும்
பதறும் நிலை அவருக்கில்லை.
சுதந்திர அடையாளம்--கொண்டும்
மதமிலா மனிதராம்.

சிவகாமி புதல்வராம்--என்றும்
புவிவாழும் புனிதராம்.
விருதுநகர் தந்த புகழ்--ஒன்றும்
விருதுதான் காமராசர்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment