கர்மவீரர் காமராசர்(குழந்தைப்பாடல்)
"அ"னா "ஆ"வனா-அது
அரிச்சுவடிப் பாடம்.
"கு"னா "கா"வனா-இது
படிச்சவங்க யோகம்.
படிக்கவைத்த காமராசர்--அன்று
ஏற்றிவைத்த தீபம்.
விடிஞ்சதம்மா விளங்குதம்மா--இன்று
ஏழைக்குத்தான் காலம்.
சுத்தமான மனிதருக்கு--புகழ்
உத்தமராம் பேரு.
மத்தியான சோறு தந்தார்--திகழ்
சத்தியமா சாமி.
நாட்டுக்காக வாழ்ந்தவராம்--அந்த
நல்லவரைத் தேடு!
ஆற்றுத்தண்ணீர் தேக்கியவர்--நம்ம
அய்யா புகழ் பாடு.
களர் நிலம் கழனியாச்சு--ஏழை
உழவர்தொழில் வளமாச்சு
பழகுதமிழ் மொழிப்பேச்சு--சோலை
அழகு அவர் குணமாச்சு.,
படிக்காத மேதை என்றே--அவரை
பழகாதார் இழிப்பார்!
கிடைக்காத கீதை ஒன்றே--இவரை
படைத்தவனும் படிப்பான்.
எதிரியென எவருமில்லை.--கண்டும்
பதறும் நிலை அவருக்கில்லை.
சுதந்திர அடையாளம்--கொண்டும்
மதமிலா மனிதராம்.
சிவகாமி புதல்வராம்--என்றும்
புவிவாழும் புனிதராம்.
விருதுநகர் தந்த புகழ்--ஒன்றும்
விருதுதான் காமராசர்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment