காதலே ஆதாரம்.
கவிதை என்றும் எழுதவில்லை.
எழுதித் தந்தும் படிக்கவில்லை.
பெண்ணே அவள்தான் கவிதையோ!
கண்கள் செதுக்கிய வரிகளோ!
காதல் கொண்டால் அவளோடு.
காலம் உண்டு உயிரோடு.
சாதல் வந்து பிரித்தாலும்
சாவதும் அந்தச் சாவாகும்.
காதல் என்றும் தோற்காது.
தீயதில் வெந்தும் நீர்க்காது.
தோன்றிய சுடரது அணையாது.
ஊன்றிய நெஞ்சதில் தணியாது.
காதல் அஞ்சும் தோல்வியோ!
சாதலென்ன வேள்வியோ!
வீரம் தூண்டும் காதலே
தீரம் ஆண்டும் வாழுமே!
ஆன்மா நேர்ந்த சங்கமம்,
ஆண்டவன் தேர்ந்த மங்களம்.
நீளும் புவியின் ஆதாரம்,
வாழும் உயிரின் காதலாம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment