Tuesday, 11 August 2015

இலவசம் எதற்கு?

இலவசம்!

கொடுப்பதெல்லாம் இலவசமென்றால்
உழைக்குமவசியம் இருக்காது.
இருப்பதெல்லாம் பொதுவென்றால்
கொடுக்கும் வேலை இருக்காது!

இருப்பது தீர்ந்து கொடுப்பது  ஒழிந்தால்
எடுத்திடப்பிச்சையும் கிடைக்காது.
கவிதைகள் மட்டும் இலவசப்பொருளாய்
காற்றிலலையும் தேடாது!

உழைத்திடுந்தேவை உணர்ந்தாலே
ஊரும் வாழும் அழியாது.
வளர்த்திடுங்கடமை அறிந்தாலே
வளரும் நாளை நல்லது!

புள்ளிகளாவது தந்திரமென்றால்
பூஜ்யங்களோ இலவசமே!
உயர்த்தும் ஒன்றோ உழைப்புத்தான்.
வியர்த்தாலாகும் வெற்றியே!



கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment