உங்க
காலைத் தொட்டு வணங்குகிறேன்
கவனங் கொள்ளுங்க-சாமி
கவனங் கேளுங்க.
கொரோனாவ ஒழிக்க நல்ல
மருந்து தானுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.
வேளை இப்போ சரியில்ல
காலில் விழுகிறேன்-பாவி
எமனாகக் கொரோனாதான்
எஙகுந் திரியுறான்-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.
நாடு ரொம்ப ஆபத்துல
வாடி அழுதுங்க-நாசக்
கேடு கெட்ட கொரோனால
பாடா படுதுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.
கொஞ்ச நாளு பொறுத்துக்கோங்க
கெஞ்சிக் கேக்குறேன்-கொடிய
நஞ்சான கொரோனாவும்
அஞ்சி ஓடும்ங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.
அரசு சொல்லும் பேச்ச நல்லா
புரிஞ்சு கொள்ளுங்க-நம்ம
உசுரு நமக்கு முக்கியம்னு
உணர்ந்து கொள்ளுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.
எதிர்காலம் இனிமையாக
தனிமை பேணுங்க-ஓயாம
கை கால்கள் சுத்தமாக
கழுவ வேணுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment