பூமியில் இல்லை நிலையான
வாழ்வே!
ஆண்டவர் என்ன! அடிமைகள் என்ன!
மாண்டதன் பின்னே மறுபேர் என்ன!
பிறக்கும்போதே இறப்பதும் ஏனோ!
வரவில் தவறும் நேர்ந்ததுந் தானோ,!
பிறப்பது எதற்கு இறக்கத் தானோ!
இருந்தென்ன வாழ்ந்தென்ன சாதித்தேனோ!
நாயுந் தானே வாழ்கிறது
நானுங் கூட அதுதானோ!
வாயுக்கும் வயிற்றிற்கும் வாழ்வதோ!
வந்ததன் நோக்கமும் அதுதானோ!
வாழ்ந்தேன் என்பதும் பொய்தானோ!
வந்ததன் பதிவு இல்லை என்றால்
வாழ்ந்ததன் அடையாளம்
என்னவோ!
இருந்தேன் என்பது பாரமோ!
ஏதோ ஒன்றாய் கிடந்தேனோ!
எண்ணும் மக்கள் இதயங்களில்
வாழ்ந்தால் நானும் வரலாறே!.
கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment