Monday, 25 November 2024

விவசாயம் பிழைக்குமா?

விவசாயம் பிழைக்குமா விவரம் புரியல.
அவசரமா யோசிக்கனும்
அழியும் முன்னால.
விளையும் நிலம் எல்லாமே வீடாகுது.
காடெல்லாம் ரோடாகி கவலையாகுது

வீடாகி ரோடாகி சோறு கிடைக்குமா.
விவசாயி தொழிலாளி 
பிழைக்க முடியுமா.
சோறு போடும் விவசாயி
செத்து மடியிறான்.
வேறு தொழில் பார்த்து அவன் 
வெளியேறுறான்.

விவசாய செலவுக் கேத்த விலையும் கிடைக்கல.
விளைஞ்சதையும் பாதுகாக்க
விஞ்ஞானம் இல்ல.
வியாபாரிதான் சம்பாதிச்சு
இலாம் அடையுறான்.
விசாயிகள் கடனாகி
விடியல் தேடுறான்.

கிராமங்களைப் பார்க்கும் போது கிறுகிறுக்குது.
கிழிஞ்ச துணி மாத்தக்கூட
ஒழிஞ்சு ஏங்குது.
பணம் வாங்கி ஓட்டு போட
வறுமை தூண்டுது.
ஜனநாயகம் செத்து ரெம்ப
நாளாகுது.

அரசியலே வியாபாரம் ஆகிப்போனது.
அதிகார வர்க்கந் தானே
ஆட்சி ஆளுது.
திரை மறைவில் பேரம்பேசி
தலைவன் ஜெயிக்கிறான்.
போட்ட முதல் இலாபத்துக்கு
வேட்டை யாடுறான்.

விலைவாசி ஏறுதுண்ணு
போராடுறான்.
விவசாயி நஷ்டம் கஷ்டம்
பேச மறுக்கிறான்.
இடைத்தரகர் பதுக்கல் பற்றி
எவன் பேசுறான்.
எதிர்ப்பவனைத் தேடி தேடி
ரைடு நடத்துறான்.

இப்படியே நாடு போனால்
என்னாகுமோ.
எப்படித்தான் வேற வழி
ஒன்னும் புரியல.
மூன்றாவது உலகப் போரும்
உதிக்கும் முன்னாலே
முயன்றுந் தன்னிறைவையே
முன்னிறுத்துவோம்.

உலகமெலாம் தன்னிறைவை
பெற்றிட வேணும்.
கலகமில்லா காலம் அதை
கண்டிட வேணும்.
விவசாயம் வாழாமல்
உயிர்கள் வாழாது.
விவசயிகள் வாழ்வுயர
வேண்டிக் கொள்வோமே.

கொ. பெ. பிச்சையா.




No comments:

Post a Comment