அய்யாவின் கவிதை பூங்கா
Saturday, 30 November 2024
ஊருக்குள் வெள்ளம்.
நான் ஓடுகின்ற ஓடை பாதை தானீவீர் மேடாக்கி வீடாக்கி நிலமாக்கினீர்.
நான் தேங்கித் தங்கும் ஏரி குளம் ஊராக்கினீர்.
உமக்காக்கி
ஆக்கிரமித்தீர்.
வேறென்ன வழி எனக்கு இடம் எனக்கு?
தடந்தேடி வழிதேடி அலைந்து தடுமாறித்தான்.
ஊருக்குள் நுழைகிறேன் வேறென்ன செய்வேனோ!
வழி செயவீர் வகை செய்வீர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment