பார் உந்தன் நெஞ்சிலே.
ஊர் பேசும் உண்மைகள்-உன்னை
உணரச் செய்யும் நன்றிகள்.
அம்மா அப்பா தெய்வங்கள்.
அவர்கள் தான் படைத்தவர்கள்.
வாழ வைத்த தெய்வங்களை-நோக
வாட வைத்தும் வறுத்தலாமோ!
பிள்ளையே என்று எண்ணி
நம்பியே வளர்த்த உன்னை.
நல்லாயிரு என்றே திண்ணை-அது
நாளை உன்னை வரவேற்கும்.
பிள்ளை வேண்டி இராமேஸ்வரம்
பெற்ற வரம் உற்ற பலன்
பிள்ளை இல்லை என்பதுபோல்-பாவம்
உள்ள இந்த வரந்தானோ!
சுமை தாங்கி கல்லாகி
சுமந்த பாரம் பொய்யாகி
சுமையாகிப் போனாரோ!-ஓய்ந்து
சுமந்த கல்லாய் சாய்ந்தாரோ,!
வானவராய் வந்தோமோ!
வளர்ந்த முறை மறந்தோமோ!
குழந்தையாய் நாம் அன்று-தவழும்
குழந்தை போல் அவரின்று.
யார்க்கும் வரும் முதுமை நோய்
பார்க்கும் பழம் கோரம் பாய்.
பெற்றவர் படுங்காட்சி-நாளை
உற்ற பிள்ளை உனக்கு சாட்சி.
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment