Monday, 25 November 2024

ஊருக்கு ஓரு மடம்!

ஊருக்கு ஒரு மடம் 

ஊருக்கொரு மடமிருக்கும்
யாருக்கும் திறந்திருக்கும்.
வழிப் போக்கர் களைப்பாற-அன்புடன்
வரவேற்று உபசரிக்கும்.

இல்லை என்ற ஏழையர்கள்
பிள்ளை பெற்ற அனாதைகள்
மடம் ஒன்று இல்லாவிட்டால்-வேறு 
இடம் எங்கோ விரட்டிவிட்டால்

வீடுவாசல் இல்லா மக்கள்
வேர்வை சிந்தும் பாட்டாளிகள்
காடு வயல் விவசாயிகள்-தங்கி
கஞ்சித் தண்ணீர் குடிக்குமிடம்.

சின்னஞ் சிறு கூடுகளாம்.
அன்னங் காய்ச்சும் வீடுகளாம்.
விருந்தாளியாய் வந்தவர்க்கும்-படுக்கத்
திறந்திருக்கும் சொந்த மடம்.

வீதி ஒன்றாய் விரிந்த மடம்
சாதிக் கொன்றாய் சிறுத்த இடம் 
வேலையற்று அரசியல்-பேசும்
வீண் வாதக் கூடாரம்.

அன்ன தான சத்திரங்கள் 
சாலையோரம் ஆயிரங்கள்
வரலாற்றுச் சின்னங்கள்-இன்று
திருட்டுத் தொழில் கூடாரங்கள்.

வள்ளல்கள் கட்டி வைத்த
பள்ளி கொள்ளும் தர்மமத்த
இல்லாத ஏழையர்க்கு-உதவும்
இலவச சேவை மடம்.

கொ. பெ. பிச்சையா.










No comments:

Post a Comment