Wednesday, 30 September 2015

யுத்தம் தொடங்கி விட்டதோ!

யுத்தம் தொடங்கிவிட்டதோ!
------------------------------
யுத்தம் தொடங்கியதோ! சித்தம் கலங்கியதோ!
பட்டும் இணையமாம் ஆப்புகளால்--செத்தும்
சத்தம் அடங்கியூழல் பேய்கள் ஒழியுதோ!
சுத்தமாகி தேறுது நாடு.

வருவாய் தருவாய் பெறுவாயென 
தெருவாசல் நின்றழைக்கும் 
வேசியென அரசுத் துறையினரும்
இழிக்கிறார் கடமை செய்திடவும்
கைக்கூலி கேட்கிறார். 

மாமூல் தாதாக்களின் வட்டார மையங்கள். 
சுங்கப் பங்குகளாய் அங்கங்கு வேட்டைகள். 
எங்கும் கொள்ளைகள் இவர்களே காவலர்கள்! . 
இதுதான் சாதனையோ! 
இதற்குத்தான் சுதந்திரமோ! 

எத்தனை தியாகங்கள்! 
எத்தனை உயிர் பலிகள! 
அடசண்டாள நீசர்களே!! 
விடுதலை பெற்றதும்
வீணாத்தான் போனதோ! 
வீணரிடம் அடிமையோ!
விதி இதுதானோ!
பாவம் நாடோ!

ஊழல் தலை விரித்தாடும்
வசூல் ராசாக்களின் கோட்டமோ
அரசு அலுவலங்கள்!.


இவர்களின் 
கொட்டம் அடக்கி
ஆட்டம் முடிக்க
வந்துவிட்டனர் .
உளவாளிகள்.
watsapp,imo,messenger


ஊழலுக்கு எதிரான 
யுத்தம் தொடங்கிவிட்டதோ!
இனிமேல் ஆப்புத்தானோ!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment