Sunday, 27 September 2015

கல்லுக்கும் உயிருள்ளது.

உயிருள்ளதே வாழ்கிறது.
---------------------------------------
ஆக்கும் சக்தி இல்லாது ஆகில்
ஆவது ஒன்றும் இல்லையே!-ஆண்டான்
காக்குள் சீவம் நீக்கும் தூலம்
கல்லு மானாலும் சாகும்

எது உயிருள்ளதோ! 
அதுவே வாழ்கிறது.
உயிர்தான் அனைத்தையும்
உருக்குலையாமல் காக்கிறது.
 எதில் உயிரில்லையோ 
அதில் வளற்சி இல்லை. 

கல்லுங்கூட உயிருள்ளவரைதான் 
கரையாமல் கடினம் பெறுகிறது. 
எப்போது அதனிடம் உயிரில்லையோ! 
அப்போதே அது பொடியத் துவங்குகிறது. 
உயிர்.............அதன் வடிவம் என்ன
உயிர்......அதன் இருப்பென்னயாரறிவார்?
அதுவே சிவம்! என்றறிவோம்.
அகிலம்  அனைத்தும் சிவ மயமே!

கொ.பெ.பி.அய்யா.
---------------------------------------------------------

No comments:

Post a Comment