கடந்தவனே கடவுள்!
ஆண்டும் கடந்தவன்
ஆண்டவன் தானவன்.!
துறந்தும் கடந்தவன்
துதியன் தானவன்.!
பரந்தும் கடந்தவன்
பரமன் தானவன்.!
பிறவியும் கடந்தவன்
இறைவன் தானவன்.!
இயக்கும் மூலவன்.
இயற்கை நாயகன்.
வியக்கும் வாலறிவன்.
விரிக்கிலா மேலறிவன்.
காற்றுப் போலவன்
கண்படா கடவுளவன்.
ஆற்றும் மேலவன்.
அகந்தொடும் உணர்வவன்.
அருவ மானவன்
அடங்கா மாணவன்.
பிரக தீசனவன்.
உருகும் பூசனவன்.
பெருக தியானமவன்
இரங்கும் தீனபந்தன்.
சருவம் வயணமவன்
தருமம் நயனமவன்.
கண்ணாடி தானவன்.
எண்ணுவார் ஆனவன்.
முன்னாடி கல்லவன்.
எண்ணூடி மின்னுவன்.
ஒண்ணாடி உள்ளவன்
தன்னூடி இல்லவன்.
எண்ணாடி தோணுவன்
எண்ணார்க்கும் தாயவன்.
இடிக்கும் இடியெங்கோ!
அதிரும் ஒலியிங்கோ!
தெறிக்கும் மின்னலெங்கோ!
பறிக்கும் ஒளியிங்கோ!
ஒலிமுந்தும் ஒளிகண்டோ!
வழியொன்றும் அறிவதுண்டோ!
இடியெனும் இடருண்டோ!
கடவுளவன் இடமன்றோ!
கொ.பெ.பி.அய்யா.
இயக்கும் மூலவன்.
இயற்கை நாயகன்.
வியக்கும் வாலறிவன்.
விரிக்கிலா மேலறிவன்.
காற்றுப் போலவன்
கண்படா கடவுளவன்.
ஆற்றும் மேலவன்.
அகந்தொடும் உணர்வவன்.
அருவ மானவன்
அடங்கா மாணவன்.
பிரக தீசனவன்.
உருகும் பூசனவன்.
பெருக தியானமவன்
இரங்கும் தீனபந்தன்.
சருவம் வயணமவன்
தருமம் நயனமவன்.
கண்ணாடி தானவன்.
எண்ணுவார் ஆனவன்.
முன்னாடி கல்லவன்.
எண்ணூடி மின்னுவன்.
ஒண்ணாடி உள்ளவன்
தன்னூடி இல்லவன்.
எண்ணாடி தோணுவன்
எண்ணார்க்கும் தாயவன்.
இடிக்கும் இடியெங்கோ!
அதிரும் ஒலியிங்கோ!
தெறிக்கும் மின்னலெங்கோ!
பறிக்கும் ஒளியிங்கோ!
ஒலிமுந்தும் ஒளிகண்டோ!
வழியொன்றும் அறிவதுண்டோ!
இடியெனும் இடருண்டோ!
கடவுளவன் இடமன்றோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment