நாட்டு நடப்பு.
நாட்டுல என்ன நடக்குது.
வீட்டுல கேட்டாத் தெரியுது.
போனுல எல்லாம் காட்டுது.
புரியாதும் புரிஞ்சு சிரிக்குது.
பழையக் காலம் வாழ்ந்தவர்
படம் பாத்து ஓட்டுப் போட்டனர்.
படிக்கத் தெரிஞ்சக் காலமிது.
விடியலைத் தேடி ஏங்குது.
அந்தக் காலம் ஆகாயப் பேச்சு,
அந்த வேளையே மறந்தும் போச்சு.
இந்தக் காலம் மூச்சுக் காற்றும்
எந்திரப் பதிவு இருப்பில் ஏற்றும்
அன்றன்று பேசியது அன்றோடு
இன்றுச் சொன்னதும் இன்றோடு
எதையும் மறுத்தால் ஒப்பாது.
அதையும் பதியத் தப்பாது.
எந்தக் காலமும் சாட்சியாம்.
சொந்தக் குரலாகச் சத்தியம்.
வானம் காற்றும் உள்ளவரை
வாய்மொழிப் பதிவு மாறாது.
யாரோப் பேசியப் பேச்சல்ல
வேறேக் குரலின் வீச்சல்ல,
ஊரே வீசும் மூச்சல்லவோ!
நேரேயே தெறிக்க விடலாமோ!
மனத்தின் சாட்சி மாண்டும் போமோ!
மறந்தும் பேச மீண்டும் துணியுமோ!
காற்றில் கலந்து வானம் பரவும்
பேச்சும் மறந்தும் மானம் ஆமோ!
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment