Monday, 17 February 2025

கண்டு கொள்ளப் படாத கலைஞர்கள்.

தெருக் கலைஞன்.

என்னயிதுக் கொடுமையோ ஏனிந்த நிலைமையோ!
கண்டுக் கொள்ள நாதி இல்லையோ!
கருணைக்கும் இரசனை
இல்லையோ!
கடவுளின் கண்களிலும்
படவில்லையோ!

கலைத் திறன் வரம் பெற்றார்
அலைப் போலும் அலைய லுற்றார்.
தெருவிலே பாடவும் வித்தைகள் ஆடவும்
சித்திரம் முதலிய செய்யொனாக் கலைகளும்
பிச்சைக்குக் கெஞ்சிடும்
இலச்சைக் கென்ன பஞ்சமோ!

பக்க வாத்தியம் ஏதும் இல்லை.
சுதி சுத்தம் பேதம் இல்லை.
வண்ணங்கள் கிண்ணம் இல்லை.
வரையவும் தூரி இல்லை.
எண்ணம் போல் ஏகலைகள்
எல்லாமே திரு வினைகள்.
அன்னம் பெறச் செய் மொழிகள்,
என்ன வேறு இவர் வழிகள்.

கலைத்தாய் பிள்ளைக்கு விலை யென்ன விதிப்பிலையோ!
வாங்கும் சக்தி எவருக்கும் தாங்கும் யோகம் இல்லையோ!
தெருக்கலை தெய்வீகம்
அருங்கலை அவர் யாகம்,
வயிற்றுக்கு இயன்ற கலை முயன்றவரை வாழ்வென்றார்.

இரயில் வண்டிப் பாடகர்கள் முயன்ற சிலர் வாழ்க்கை முறை,
வியக்கும்படி உயர்ந்ததும் விளங்கியரும் சிலருண்டு.
ஆனாலும் இன்னும் இலட்சம்
வானம் பாடித் தானம் கேட்கும்
கானம் காற்றில் மானம் காக்கும்.

கொ.பெ.பிச்சையா.





























No comments:

Post a Comment