Saturday, 22 February 2025

பழனி சாமி முடிக்கட்டும்!

நாட்டுப்புறப் பாடல்.


ரெட்டைச் சடைக்காரியே

கொல்லுறியேக் கள்ளியே!

வட்ட விழிக் கொள்ளியே--சுட்டு

வாட்டுறியே  என்னையே!


உன்னப் பெத்தவ யாரடி

எனக்கு அத்தை  அவளடி.

மச்சான் எவனோ பாக்கல!

மாமன் குணத்தக் கேக்கல!


முன்னப் பின்ன அறியல

முறையப் பத்தியும் நினைக்கல.

எப்படி நுழைஞ்சக் கனவுல

இப்படிப் படுத்துற உசுறல.


காந்தக் கண்ணோ இழுக்குற! காரணம் புரியலக் கவுக்குற. சிரிச்சும் சிரிக்காம சிரிக்கிற பறிச்சது மனசு பாவன்டி.


இடுப்பு எங்கடிக் காணல. மடிப்புச் சுங்கடி மறப்புல.

வெடுக்கு நடையின் மிடுக்குல

படபடக்குது மனசுல.


நடப்பது எதுவோ நடக்கட்டும்.

நடந்தும் நலமே விடியட்டும்.

பழனிச்சாமி அருளாலே

பாலும் பழமும் கிடைக்கட்டும்


காத்துல பாவாடை பத்திரம் பாத்துக்கோடி அள்ளுது.

மானம் போகுமோ அஞ்சாதே!

மாமன் என்னை மிஞ்சாது.


கொரனா ஒழிஞ்சும் போனது

குடும்பம் ரெண்டும் கலந்தது.

கோவில் வாசல் திறந்தது.

ஆவது எல்லாம் ஆகட்டும்.

கொ.பெ.பிச்சை யா.

No comments:

Post a Comment