Tuesday, 7 January 2025

அன்பே கடவுள்.

அன்பே கடவுள்.

அன்புக் கென்ன பொருளாம்!
அதற் கென்ன ஆதாரம்!
அழகுக் கென்ன அடையாளம்!
அதற் கென்ன அருத்தம்!
அறிவுக் கென்ன விளக்கம்
அதற் கென்ன பொருத்தம்!
மூன்றுக்கும் மூலம் தான்
வேண்டும் அந்தக் கடவுளாம்.

அன்பினால் ஒளிரும் முகம்
அறிவினால் மிளிரும் அகம்.
அருள் செய்யும் கடவுள் வரம்
அழகெனப் பொருளாகும்.
அன்பெனும் அருட் கொடை
அறிவழகு திருப் படை.
அன்பே தான் இறை ஆகும்
அதற்கன்ன வரையாகும்!

மனிதராய் பிறந்தா ரெல்லாம்
மனிதர் என்று ஆவதில்லை.
மனிதம் எனும் அன்புள்ளம் 
இனிதம் அன்றி நேர்வதில்லை.
இதயம் அது தூய்மை ஆனால்.
புனிதமாகி பொலிவு ஆகும்.
கடவுள் அங்கே குடி அமரும்
இடம் தங்கும் இல்லம் ஆகும்.

அன்பி னதன் செல்வங் களாம்
அழகறிவின் அம்சங் களாம்,
கடவுள் வரவுத் தோரணங்கள்;
காட்சி தரக் காரணங்கள்.
இதயம் உன்னில் கோவில் ஆச்சு,
இறைவன் செய்யும் ஆட்சி ஆச்சு
ஆரவாரம் அடங்கி போச்சு
அன்பே கடவுள்  விளங்கி ஆச்சு.

கொ.பெ.பிச்சையா.











No comments:

Post a Comment