ஈரம் காக்க!
சகாக்க! காக்க!
இயற்கை காக்க!
காக்க! காக்க!
இயற்கையைக் காக்க!
இயற்கையை மதிப்பார்,
இறையெனத் துதிப்பார்.
ஆதிமூலம் சக்தியென்பார்,
அதன்வழி இயக்கம்
பகவன் என்பார்.
பருவ காலங்கள் ஆறும்,
முறையாகத் தானே மாறும்.
நெறி விதியாளும் இயற்கை;
குறிதவறாது உலகைக் காக்க:
இறை யெனப்போற்றித் துதிக்க!.
மாதங்கள் சாரும் நேரும்,
காலங்கள் ஆறும் ஆளும்,
காற்றும் மழையும் பனியும்;
வேனிலும் தளிர்ப்பும் பசப்பும்;
பேணிடும் இயற்கைக் காக்க!
கார்மேகம் வானம் மூட,
பாரெலாம் செழித்து வாழ,
ஆதவன் அருளது மேவ;
வானம் கடலும் மலைகள்:
ஈவின் கருணை காக்க!
ஊருகள் வாழ சோறும்,
ஏரது பிழைக்க நீரும்.
கழனிக் கடைமடை பாயும்
ஆறுகள் நதிகள் தமணியாம்:
ஓடுங் குருதியாம் காக்க!
மலையும் கடலும் ஆகாயமும்,
உலவும் உயிர்களின் ஆதாரம்.
காப்பதும் தூய்மை பேணலும்
ஏற்பதும் வாழ்வின் சுகாதாரம்.
பூமியின் அவசரம் காக்க!.
காக்க காக்க ஈரம் காக்க!
காக்கும் மழைநீர் நிலத்துள் காக்க!
தேக்கும் மணலை தேயாது காக்க!
ஈர்க்கும் பூமிக்கு இடந் தந்து காக்க!
ஆக்கும் வேளாண்மை ஆருயிர் காக்க!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment