Thursday, 9 January 2025

மரணம் முடிவல்ல.

 மரணம் முடிவல்ல.

________________________

மரணமும் முடிவல்ல.

தருணமும் எனக்கல்ல.

உடல்தான் நீராகும்.

உயிர்தான் வானேகும்.


கவிதையாய் நான் வாழ்வேன்.

காலங்கள் கடந்தும் ஆவேன்.

புவியிது உள்ள மட்டும் 

கவிஞனாய் ஆசானாவேன்.


கூகுலில் குடியிருப்பேன்.

யோகனாய் விழித்திருப்பேன்.

தேடுவோற்கு விழியாவேன் 

பாடுங்கவி வழியாவேன்.


கவிஞர்.கொ.பெ.பிச்சையா














No comments:

Post a Comment