Saturday, 4 January 2025

அலைபாயும் மனது

அலைபாயும் வாழ்க்கை.

அலை பாயும் வாழ்க்கை  ஓயாது//
நிலை யின்றி எதிலும் 
சாயாது//
கலையாது ஆனாலும் தன்னிலை தேயாது//
விலை மாது போன்றும் 
பாயாது//
முடிவுக்கும் வாராது முயன்றாலும் தீராது//.
குரங்கு அன்ன ஒன்றில் நில்லாது//
சிரங் கொன்றைச் சீண்டினும் 
மருந்திட்டுக் கொள்ளாது.//
அரங் கின்றி கொண்டெதும்
செல்லாது//
மருகி மருகி அலைந்து 
அமைதி//
திரிந்து குலைந்து அலைபாயும்
வாழ்க்கை.//

கொ.பெ.பிச்சையா

No comments:

Post a Comment