அலைபாயும் வாழ்க்கை.
அலை பாயும் வாழ்க்கை ஓயாது//
நிலை யின்றி எதிலும்
சாயாது//
கலையாது ஆனாலும் தன்னிலை தேயாது//
விலை மாது போன்றும்
பாயாது//
முடிவுக்கும் வாராது முயன்றாலும் தீராது//.
குரங்கு அன்ன ஒன்றில் நில்லாது//
சிரங் கொன்றைச் சீண்டினும்
மருந்திட்டுக் கொள்ளாது.//
அரங் கின்றி கொண்டெதும்
செல்லாது//
மருகி மருகி அலைந்து
அமைதி//
திரிந்து குலைந்து அலைபாயும்
வாழ்க்கை.//
கொ.பெ.பிச்சையா
No comments:
Post a Comment