Thursday, 6 November 2014

விழுவது எழுவதற்கே.


துணிக எழுக!

விழுந்தாயா எழுந்தாயா விடைக்கிங்கு நேரமில்லை.
அழுதாயா சிரித்தாயா அதற்கிங்கு அவசியமில்லை.
விழுவதற்குள் எழுந்திட மறந்துநீ கிடந்தாலுன்மேல்
உழுதிங்கு பயிர்செய்து அறுவடை முடித்திருப்பார்.

விழுவதெதற்கு எழுவததற்கு அழுவதற்கல்ல எழுகவே!
அழுவதெதற்கு சிரிப்பததற்கு முடிவதற்கல்ல துணிகவே
முடிப்பதெதற்கு தொடர்வததற்கு மறப்பதற்கல்ல வளர்கவே!
மறப்பதெதற்கு நினைப்பததற்கு துறப்பதற்கல்ல மலர்கவே!

தவறுமொன்று பழகும்நன்று திருந்துமென்று நிச்சயம்.!
எவருமிங்கு உலகம்கண்டு பிறக்கவில்லை சத்தியம்.
பதறுமொன்று சிதறுமென்று இதயம்கொண்டு துணியனும்.
எதையும்வென்று எடுப்பேனென்று இறங்கிச்செய்யத் தெளியனும்.

அவசரஉலகம் அவரவ்ர்பணிக்கு அவசியமிருக்கு உணர்கவே!
சுவராய்சும்மா இருந்தால்சுமையே சொரனைமுறுக்கு முனைகவே!.
காலமெவர்க்கும் கைகட்டியில்லை நாளுமதுவும் வேகம்பெருக்கும். 
சூலம்கணித்தும் சுழல்வதில்லை வேலையொன்றே விதியெனநெருக்கும்.

மனிதம்கெட்டு புனிதம்பட்டு தர்மமிங்கே சாகுதே!
இனியும்நட்டு இளமைவிட்டு கர்மமென்ன  ஆவதோ!
வினையேவிதியே வேறேகதியோ விரைவெனப்புயலே  செல்கவே!
துணிகவெழுக தொடர்கஇணைக முனைகமுடிக்க வெல்கவே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment