சின்னப்பொண்ணே !
-------------சேதி கேளு!(குழந்தைப் பாடல்)
சின்னப்பொண்ணே!சின்னப்பொண்ணே!
சேதி கேளம்மா----உந்தன்
அன்னை பேச்சைக் கேட்டு வளர்ந்து
அருமை கொள்ளம்மா.-----அம்மா
பெருமை அடையணும்-----நீயும்
வளமை அடையணும்.
காலம் மிகவும் கெட்டுப் போச்சு
கருத்தில் கொள்ளணும்-----அழகுக்
கோலம் போன்றே உன்னைக் காக்க
தெரிந்து கொள்ளணும்------நீயும்
புரிந்து நடக்கனும்------பக்கம்
அறிந்து பழகணும்.
பெண்ணினந் தின்னும் பேய்கள் அலையும்
பார்தது விலகணும் ---எவரும்
அறியா மனிதர் அருகே வந்தால்
சரியா பேசி நெருங்காமலே----விட்டு
ஒதுங்கிப் போகணும்----பாப்பா
உசார் ஆகணும்
பள்ளி வீடு இரண்டுந்தவிர வேறே எங்குமே
உற்றாரன்றி உறவென்று நம்பி
மற்றாருடனும் செல்ல வேண்டாமே.----- எவரும்
தின்னும்ம் பண்டம் தந்திட்டாலும்
வாங்க வேண்டாமே-----உடனே
நீங்க வேண்டுமே.
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment