பத்திரமாய்
போய் வா!!
..
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
சின்னப் பொன்னே!
சின்னப் பொன்னே.
சேதி சொல்லட்டுமா.
தின்னப் பண்டம்
தந்தால் வேற்றாள்
தின்ன வேண்டாமே...
மயக்க மருந்து
கலந்திருப்பார்
நினைவில் கொளம்மா..
மயக்கியுனை
எவர்க்கேனும்
விற்றிடுவாரே..
அம்ம அப்பா
தந்தாரென்றே
பொய்யுஞ் சொல்லுவார்.
அம்மா அங்கே
இருக்கா ளென்றே
ஆசையுஞ் செய்வார்..
அப்பாவோட
நண்பனென்றும்
தப்பாச் சொல்லுவார்...
கூட்டி வரச்
சொன்னாரென்றே
கடத்திடுவாரே..
வீட்டு வேலை
ஆளானாலுமே
நம்பிவிடாதே.
ஒளித்து வைத்து
பெற்றோரிடம்
பணம் பறிப்பாரே.
பத்திரமாய்
பள்ளிக்கு நீ
போய் வரனுமே..
காத்திருப்பேன்
உனக்காக
அம்மா நானுமே.
No comments:
Post a Comment