Sunday, 30 November 2014

நல்வழி.....குழந்தைப் பாடல்.

புதிய நல்வழி 5 (குழந்தைப் பாடல்)

நதிகள் எல்லாம் இணைப்போமே!
நாட்டு நலமும் செழிக்குமே!.
நிலங்கள் எல்லாம் நனைப்போமே!.
நீர் வளம் தங்கி நிலைக்குமே!
நுகரும் விலையும் சரியுமே!
நூதனம் பெருகி விரியுமே!
நெல்வயல் பரவிப் பெருகுமே!
நேரும் பஞ்சமும் ஒழியுமே!
நைந்த நிலையதும் தேறுமே!
நொறுங்கி வறுமையும் சாகுமே!
நோக்கம் திருமை ஆகுமே!
நௌவும் கரை வந்து சேருமே!


நௌ---மரக்கலம்

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment