நானும் ஒரு போராளிதான்.
நானுமொரு போராளி மனிதனோடுதான்.
வேணுமவன் சீராளன் மனத்தினோடுதான்.
தோற்றுத் தோற்று வீழ்ந்தாலும் தோற்கவில்லைதான்.
நேற்று இன்று மாற்றம் பார்த்து வேர்த்திருக்கிறேன்..
இறைவன் என்பான் இருக்கிறானோ! இல்லையோ!
மனிதன் என்பான் பிறக்கிறானா சொல்லையா.
பிறக்கும் போது மனிதனாகப் பிறந்தவன்
பிறகு ஆவதேனோ அய்யோதனை மறந்தவன்.
கடவுளென்ன்று சொல்லக்கேட்டால் அறிவு சிலருக்கு
கடலுக்குள் பொங்கும் சுனாமி விரைவு இருக்கு.
அவனாலாகிய நட்டம் என்ன மனித குலத்திற்கு?
அறிவாளியென்ற பட்டம் இலாபம் இருக்கு.
அறிவுக்குள்ளே மறைந்திருக்கும் மனச்சாட்சிதான்.
அறியும் விதம் உள்ளேயிருக்கும் இறைமாட்சிதான்.
தனைஆய்ந்து தேடினால்தான் வெளிப்படும் காட்சி
மனம்மேய்ந்து ஓடினால்தான் பிழைபடும் சாட்சி.
இல்லையன்று சொல்லுவாரும் இருப்பைத் தேடுறார்.
சொல்லொன்றும் அஞ்சிநெஞ்சில் உறுத்தல் ஆகிறார்.
எதற்கு இந்த ஆராய்ச்சி என்ன பயனுண்டோ!
இதயம் ஓன்றி நேராய்ந்தால் இறைநீயன்றோ!
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment