Wednesday, 31 December 2025

கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது--அது
கொலை செய்யவும் தயஙகாதது.
சிந்திக்கச் செய்யாதது--நொடியில்
செய்பிழை உணராதது.

அறிவினை மழுக்குங் கோபம்--புத்தி
தெளிவினைக் கலக்கி விடும்
புரிவினைத் தடுக்குங் கோபம்--உண்மை
அறிவினைக் கெடுத்து விடும் .

யோசிக்க மறுக்குங் கோபம்--உற்ற
நேசத்தை மறக்கச் செய்யும்.
தோசத்தைத் தோண்டுங் கோபம்--நிச
வேசத்தைக் காட்டி விடும் 

சமரசம் ஆகாக் கோபம் --மன
சமநிலை சிதைத் தழிக்கும்.
அமைதியைக் கலைக்குங் கோபம் --உள்
ஆன்மாவை அடக்கி விடும்.

விழிகள் சிவக்குங் கோபம் --இரத்த 
அழுத்தம் அதிகம் ஆக்கும்.
இதயத்தை இறுக்குங் கோபம் --செயல்
இயல்பினை சிதைத்து விடும்.

ஆராய அவசரக் கோபம்--அப்புறம்
ஆவதையும் ஆராயாது.
நேர்வதை எண்ணாதக் கோபம்---பின்
பார்வையை மறந்து விடும்.

பகைமைக்கு வித்தாகுங் கோபம்--உறவு
பசுமைக்கு பஞ்சம் ஆக்கும்.
அழிவுக்கும் ஆரம்பம் கோபம்--உயர்
வளர்ச்சியைத் தடுத்து விடும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment