அப்பா அப்பாதான்.
ஆண்டவனுங் கூட உன் போல் இல்ல.
சொப்பனமே உனக்கு நானே
அப்பா உனக்கு எல்லாம் நானே.
நடையைப் பழக்க விரலைப் பிடித்தாய்
உலக வழக்கைச் சொல்லித் தந்தாய்
வளர்ந்து படியேறக் கரம் கொடுத்தாய்
படிக்க வைத்து ஆளாக்க உழைத்தாய்.
விடியலை வேர்வையில் ஏற்றினாய்
படிகளில் ஏற்றி ஞானம் ஊட்டினாய்.
தோள்மீது உயர்த்தி ஞாலம் காட்டினாய்.
நீ காணா உலகை நான்காணச் செய்தாய்
உன்னுயரம் அதனில் என்னுயரம் கண்டாய்.
பின்னுயரம் கண்டு பெருமை கொண்டாய்
கனி கொடுக்கும் வரையும் காத்திருந் தாயோ!
கனிகொடுக் கும்போது நீ பறந்தாயோ!
ஆல மரமாய் நிழல் தந்தாயே!
நாலும் அறிய நீ நிறைந் தாயே!
என்னென்ன ஆசைகள் என்மீது வைத்தாய்
எனக்காகத் தானே ஓடியோடி
உழைத்தாய்
திருத்த் தானே வருத்தி நிமிர்த்தாய்
நிறுத்தி என்னை நிமிர்ந்து பார்த்தாய்.
பொருத்திப் புகழோடு வரைந்து வார்த்தாய
செருக்கில் என்னில் பெருமை சேர்த்தாய்.
கோவத்தில் அடித்துப் பின்னே
குழுங்கித் துடித்து அழுவாயே!
தீபம் வாழ்வில் ஏற்ற நீயே!
யோக மெல்லாம் ஏற்றாய் நீயே!
பக்கத்திலே படுக்கவைத்து
பழக்கம் விட்டு ஆற்றுவாய்
கக்கத்தில் தூக்கி வைத்து
கதைக ளெல்லாம் சொல்லுவாய்.
பாவி நான் அடிச்சேண்ணு
நீவி விட்டுக் கெஞ்சுவாய்.
கோவித்ததும் குத்தமுண்ணு
ஆவிக் கொஞ்சி முத்துவாய்.
தப்பு செஞ்ச என்னை நீ!
தண்டிக்காம விட்டுட்டு
ஒப்புக்கு அம்மா முன்னே கண்டிச்சாப்புல நடிச்சுருவ!
நல்லதொரு கூட்டாளி நீ!
நாளெல்லாம் பாட்டாளி நீ!
சுமைதாங்கிக் கல்லா நீ!
சுமந்து சுகம் கண்டாய் நீ!
என்ன நான் கேட்டாலும் நீ
இல்லயிண்ணே சொல்லமாட்டாய்.
கையில் காசு இல்லைண்ணாலும்
கடன் வாங்கக் கூச மாட்டாய்.
கொழுத்து நின்ன ஆலமரம்
உலுத்தப் பின்னே ஓய்ந்தது போல்
விழுது என்னை நம்பினாயோ!
தொழுது என்னைக் கடன் செய்தேனோ!
அப்பாவப் போலொரு
தோழன் இல்ல
அப்பாவப் போல் நல்ல
ஆசானும் இல்ல
அம்மாவப் போலே சொல்ல
ஆகாயம் நீயே அப்பா!
உன் நிசத்தை மதியாத நான்
உன் நிழலைக் கண்டு தொழுகிறேன்.
இருக்கும் போது புரியாத உன்னருமை
இல்லாத போதே அறிந்தேன் உன் பெருமை.
சும்மா சொன்னாப் போதாதப்பா.
அம்மை அப்பன் நீதானப்பா!
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment