அண்ணன் என்னடா தம்பி என்னடா!
அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
கொஞ்ச நாள் உறவினிலே
தன்னோடு ஒருத்தி துணையா வரும்வரை,
பெண்சாதி பிள்ளைகள்
குடும்பம் ஆகும்வரை
தன்னோட குடும்பம் தனியே பிரியும்வரை,
அண்ணன் தம்பி உறவும் அதுவரைதானடா.
சொந்தம் பந்தம் சுயநலமாகிச் சுருங்கிப் போனதடா.
பற்று பாசம் எல்லாம் விலகி
பகையாய் உறவும் விசமாய் ஆனதடா.
என்ன சொந்தம் என்ன பந்தம்
எல்லாம் கொஞ்சநாள் பழக்கம் போலானதடா.
சின்னஞ்சிறு வயசுலதான்டா.
அண்ணந் தம்பி உறவுந்தான்டா,
அடிச்சாலும் புடிச்சாலும்
துடிச்ச இரத்தன்டா,
அடிபுடியாகிக் கொலைவெறிக் கோலம் ஏனடா?
பள்ளிக்கூடம் போகையில
துள்ளி நாம விளையாடயில
அள்ளி அள்ளி முத்தமிட்ட
அண்ணன் தம்பி உறவுதானடா.
சொல்லிச் சொல்லி வியந்த உறவடா,
சுற்றம் பேசக் கசந்து போனதடா.
தாயவள் சொல்லைக் கேட்டோமடா.
தந்தைச் சொல்லை மதித்தோமடா.
பாய் ஒன்றில்தானே படுத்தோமடா.
பகுத்துண்டு சேர்ந்து மகிழ்ந்தோமடா
வளரும் போதிருந்த
பாசமெங்கடா?
வாழும் போது மட்டும்
வழிமாறிப் போனதென்னடா?
கருவறை ஒன்றில்தானடா
உருவாகிப் பிறந்தோமடா.
ஓருயிரில்த் தானே உதித்தோமடா
பிரிவின்றிப் பாசமாய் வளர்ந்தோமடா.
அந்நியர் எவரும் பகைக்கும் போதிலே
ஒற்றுமைப் பலமா நின்னோமடா.
வாலிபமாகி விளைஞ்சோமடா.
குடும்பங்கள் பலவா கலைஞ்சோமடா.
தின்பண்டம் பகிரயில
தன்பங்குச் சண்டை இல்லடா.
வன்னெஞ்சப் பகையென்ன
சின்னெஞ்சில் தெரியலடா.
பிரிஞ்சிருக்க அறிஞ்சதில்ல
அறிஞ்சதொன்னும் மறைச்சதில்ல.
சொத்துண்ணு பிரிக்கையில
சொந்தம் பந்தம் நிசமேயில்லடா.
கூட்டமா வாழ்ந்தோமடா.
குடும்பமா ஆண்டோமடா.
நிலங்கூடி இருந்தோமடா
நிறைஞ்சது களஞ்சியன்டா.
முழமுழமா பகுந்தோமடா
களஞ்சியமேக் காணோமடா.
மச்செல்லாம் குச்சியாச்சி
மனைபலவா பிச்சாச்சிடா.
பங்காளி என்பவன் பகையாளிதானோடா.
நம்பியிடக் கூடாத நயவஞ்சகந்தானோடா
நண்பன் மட்டும் என்றுமே நல்ல துணைஆவானடா.
அண்ணன் தம்பி பாச மெல்லாம்
அறியாத வேசமடா.
கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment