கனவில் கலந்தோம்.
இனிமையில் நாம் கனவில் கலந்தோம்
இளமை விருந்தில் இணைந்து உண்டோம்.
நிலைமை மறந்து நினைவை இழந்தோம்.
உலகைத் தொலைத்தோம் நிலவைப் படைத்தோம்.
நிலவில் மிதந்தோம் நித்திரை மறந்தோம்.
சொர்க்கம் கண்டோம் சுபமே உணர்ந்தோம்.
பக்கம் நெருங்க நெருங்கி ஒன்றுணர் வானோம்.
ஆசை கரைந்து மோகம் நிறைந்து
ஓசை மறைந்து பாசை மறந்து
இலேசாகி ஈருடல் ஓருருவாகி
உலாவி வானில் உயரேப் பறந்தோம்.
காட்சிகள் அழித்ததுக் கண்கள்
கற்பனை ஒளித்தது எண்கள்
சூன்யம் ஆனது அண்டம்
சுதந்திரம் ஒன்றே கண்டோம்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment