கரங்கள் கோடி கூடி மறித்தாலும்
காலம் ஓடித் தேடி ஒளியாது.
ஓராள் என்று மாறாக எண்ணாதே.
ஒன்று பத்து நூறு ஆயிரம்
இலட்சம் கோடியெனப் பல்கும்.
ஓரனுப் பரிமாண உண்மை விளங்கும்.
அதிகாரப் போதை கதிமாறி அழிக்கும்.
சதிகாரச் சூதை விதிசாடிப் பழிக்கும்.
வரலாற்றுப் பாதை அரக்கரை இழிக்கும்.
கொலைப் பாவங்கள் காலத்தில் விழிக்கும்.
நல்லவன் எதுவோ வல்லவன் அதுவே.
உள்ளதும் உண்மை வெல்வதும் நிசமே.
சொல்லும் சத்தியம் வல்லமை அதுவே
வெல்லும் சாத்தியம் உள்ளதும் நிசமே.
மக்கள் சக்தி மகத்துவ வெற்றி.
சகத்துவ உத்தி சரித்திர உண்மை.
அகத்துள் ஒருவன் அன்பின் வெற்றி.
முகத்திரை கிழித்து முடிப்பதும் உண்மை
துரியோன் கூட்டம் அரியணை ஆசை.
மதியாத ஆட்டம் புடுங்கியாச்சு பீசை
ஆகாத ஆசையில ஊத்துகிற தோசை.
வேகாத விரசத்தில வீசுறாங்க கேசை.
கிழட்டு நரிக்கூட்டம் ஓடுதுபார் ஓட்டம்.
விளையாடி முடிஞ்சது கலைஞ்சதவர் ஆட்டம்.
வாலிபச் சிங்கங்கள் வந்தனக் களமாட
காலியிடம் நிறைஞ்சாச்சி நாளையெம் வசமாச்சு.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment