ஒரு நாளே போதும்!
ஒரு நாளே போதும்
உன்னோடு--அந்தத்
திருநாளே சாவேன்
மண்ணோடு-பிறவி
நிறை நாள் ஆவேன்
என்னோடு.
நெஞ்சொன்றுதானே
உள்ளது--அதில்
நினைவொன்றுந்தானே
உன்னது-எனக்கு
மஞ்சமென்றாலுன்
மடியது--நீ
தஞ்சம் தந்தால்
தவமேது?
காற்றும் இடை தேடி
அலையுமோ!--அது
தோற்றும் புறம் ஓடி
தொலையுமோ!--குளிர
ஊற்றும் மழை நின்று
ஒளியுமோ!--நனைத்து
சூட்டு மடை ஒன்று
பொழியுமோ!
பாவம் சூரியன்
பார்ப்பானோ!--தானும்
தாகம் ஏறியும்
வேர்ப்பானோ!--காதல்
வெப்பம் தீர்க்க
வருவானோ!--தானே
வெப்பம் ஆறி
விழுவானோ!.
கடலும் வாழ்த்திப்
பாடிடும்---அலை
மடல்கள் வீசி
ஆடிடும்--இரு
உடல்கள் கூடி
இறுகிடும்--ஒரு
விடையே தேடி
மறுகிடும்.
நேரம் கூடியும்
நாள் வரும்--இனி
யாரும் கூறியும்
நாம் பிரியோம்--காணும்
ஊரும் பேசியும்
அலர் செய்யும்--மடல்
பேரும் வாசிக்கும்
மலர் கொய்வேன்.
கொ.பெ.பி.அய்யா.
ஒரு நாளே போதும்
உன்னோடு--அந்தத்
திருநாளே சாவேன்
மண்ணோடு-பிறவி
நிறை நாள் ஆவேன்
என்னோடு.
நெஞ்சொன்றுதானே
உள்ளது--அதில்
நினைவொன்றுந்தானே
உன்னது-எனக்கு
மஞ்சமென்றாலுன்
மடியது--நீ
தஞ்சம் தந்தால்
தவமேது?
காற்றும் இடை தேடி
அலையுமோ!--அது
தோற்றும் புறம் ஓடி
தொலையுமோ!--குளிர
ஊற்றும் மழை நின்று
ஒளியுமோ!--நனைத்து
சூட்டு மடை ஒன்று
பொழியுமோ!
பாவம் சூரியன்
பார்ப்பானோ!--தானும்
தாகம் ஏறியும்
வேர்ப்பானோ!--காதல்
வெப்பம் தீர்க்க
வருவானோ!--தானே
வெப்பம் ஆறி
விழுவானோ!.
கடலும் வாழ்த்திப்
பாடிடும்---அலை
மடல்கள் வீசி
ஆடிடும்--இரு
உடல்கள் கூடி
இறுகிடும்--ஒரு
விடையே தேடி
மறுகிடும்.
நேரம் கூடியும்
நாள் வரும்--இனி
யாரும் கூறியும்
நாம் பிரியோம்--காணும்
ஊரும் பேசியும்
அலர் செய்யும்--மடல்
பேரும் வாசிக்கும்
மலர் கொய்வேன்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment