பறவைக்கென்ன பாரமோ!
ஆகாயம் மேலே ஆதாயம் கீழே.
ஆண்டவனாலே ஆடுவதும் வாலே.
எட்டும்வரைதான் எல்லாமே நமதே.
எட்டாத உறவுக்கு எல்லாமும் பொதுவே!
பறவைக்கென்ன பாரமோ! பறப்பதுதான் தூரமோ!
சுமையென்ன சொந்தமோ! சுமக்கவென்ன மிஞ்சுமோ!
விழி காணும் காட்சியோ! வழிகாணும் வாழ்க்கையோ!.
ஒளிவென்ன தேவையோ! உடல் தேடும் மூச்சையோ!
சுற்றுஞ்சுழல் பூமியை சுற்றிவரப் பாடுவோம்.
எட்டிஎழும் வானத்தை தொட்டுவிடத் தேடுவோம்.
முட்டும்வரை உச்சியை முடிந்தமட்டும் ஏறுவோம்.
கிட்டவந்து மெச்சும்போது இறைவனடி ஆறுவோம்.
குழந்தையாய் வந்த போதும்
ஆகாயம் மேலே ஆதாயம் கீழே.
ஆண்டவனாலே ஆடுவதும் வாலே.
எட்டும்வரைதான் எல்லாமே நமதே.
எட்டாத உறவுக்கு எல்லாமும் பொதுவே!
பறவைக்கென்ன பாரமோ! பறப்பதுதான் தூரமோ!
சுமையென்ன சொந்தமோ! சுமக்கவென்ன மிஞ்சுமோ!
விழி காணும் காட்சியோ! வழிகாணும் வாழ்க்கையோ!.
ஒளிவென்ன தேவையோ! உடல் தேடும் மூச்சையோ!
சுற்றுஞ்சுழல் பூமியை சுற்றிவரப் பாடுவோம்.
எட்டிஎழும் வானத்தை தொட்டுவிடத் தேடுவோம்.
முட்டும்வரை உச்சியை முடிந்தமட்டும் ஏறுவோம்.
கிட்டவந்து மெச்சும்போது இறைவனடி ஆறுவோம்.
குழந்தையாய் வந்த போதும்
அழுகை மட்டும் கொண்டு வந்தோம்.
உலகை விட்டுப் போகும் போதும்
அழவைத்தே போகிறோம்.
அழவைத்தே போகிறோம்.
நோய் தந்தோம் தாய்க்கு
வாய்க்கரிசிதான் போட்டோம்.
பாய் தந்த மனைவிக்கு
நோய்தானே தந்தோம் வேறென்ன!
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment