புதிய கீதை 4 (யார் நீ?)
யாருக் காக மனிதாநீ வாழவேண்டும்?.
யார் வாழ மனிதாநீ ஆள வேண்டும்?.
யார் சொந்தம் எண்ணிநீ வாழ்கின்றாய்?
யார்க் கென்று சேர்க்கவும்நீ ஆள்கின்றாய்?
இரத்த சொந்தம் நம்பிநீ வாழ்ந்தாளும்.
சுற்ற பந்தம் வாழநீ ஆண்டாலும்
சொத்தென்ன பற்றென்ன கணக் கிட்டுத்தான்
சுற்றம் பற்றும் சுடு காடுவரைதான்.
அன்பென்ற சொத்து ஆள் சேர்க்குமே!.
அன்புக்குள் சொர்க்கம். வாழ் வாகுமே!
வந்தது எல்லாம் சொந்தம் இல்லையே!
பந்தம் என்பதும் பாசம் இல்லையே!
உறவுகள் பொய்யென்று உலகம் கண்டதே!
வரவுகள் கைக்கொண்டு உறவுகள் நின்றதே!
இரத்த வகைகளும் வழிமுறை இல்லை.!
ஒத்தணையும் இரத்தமும் சொந்தமும் இல்லையே!!
நிறமென்ன தரமென்ன வகை எத்தனை?
வகையென்ன தகையென்ன மனம் எத்தனை?
பேரென்ன ஊரென்ன பிணமான பிறகென்ன?
யாரென்ன நினைவென்ன நிலைப்பதென்ன?
அண்ணன் தம்பி அக்கா தங்கை
பின்னும் பிள்ளை பேரர் என்று
எண்ணும் உறவு எல்லாம் எங்கே?
மண்ணாகும் மனிதாஉன் சொந்தம் எங்கே??
.
உரிமையே கருமமென நீ வாழ்ந்திட்டால்
கடமையே உடமையென நீ ஆண்டிட்டால்.
மனிதமும் புனிதனாய் உன்னைப் போற்றும்.
உலகமும் இறைவனாய் தன்னில் ஏற்றும்.
உயிரெல்லாம் உன்சொந்தம் உன்னில் ஏற்று.
உலகெல்லாம் உன்இல்லம் என்றே போற்று.
பொதுநன்மை ஒன்றிற்கே நீ வாழ்கவே!
அதுஉண்மை என்பதை நீ நாட்டுக!!
அச்சமஞ்சும் மடைமையை போக்கி முன்னேறு.
உச்சங்கொஞ்சும் .வளமையை ஆக்கி நின்னேறு.
மச்சமென உன்சாதனை வாழ்ந்து காட்டுக!
எச்சமென்றும் உன்புகழை பாடி வாழ்த்துமே!
யாருமிங்கே யாருக்குமே தாழ் வென்றில்லையே!.
சோறுஞ் சொத்துமே வாழ் வென்றில்லையே!.
நேரும் நிலைமை சதமுமில்லை உலகமிங்குமே!
தேறும் கடமை செயலாக மாற்ற தடையும் இல்லையே!
வந்ததாக வரவொன்றும் பதிக்க வேண்டுமே.
வாழ்ந்ததாக அடையாளம் செதுக்க வேண்டுமே.
மனிதம்நின்று ஆண்டஉன்னை நினைக்க வேண்டுமே.
புனிதனென்று ஆண்டவனாய் துதிக்க வேண்டுமே.
கொ.பெ.பி.அய்யா.
.jpg)
No comments:
Post a Comment