Tuesday, 26 August 2014

புதியகீதை 6


புதிய கீதை 6 (பயம் பாவம்)

பயமென்ப தன்வய மற்றலையும்  மனமோ?
நயமெது என்றாய நின்றுத வாக்குணமோ?
முயன்றுந் தெளிய முயலாத் துணிவோ?
இயன்றதன் நம்பிக்கை இல்லா தெனுமோ?.

வாஞ்சையில் விஞ்சியும் வாக்கினால் பொய்க்கவும்
தீய்ந்ததீ போன்றும்நீ ஓய்ந்தும்ஏன் நீருவதோ?
ஊஞ்சலாய் உள்மனம் ஒன்றினில் நில்லாதும்
ஆய்ந்த பயத்தினால் அல்லலும் நேருவ்தோ?
.
தர்மத்தின் தப்புவான் தனதுற வாகினும்
கர்மத்தின் பாவியவன் கட்டுண்ட பயமும்
அதர்மம் விலகுவதும் அவர்பின் தொடர்வதுவும்
பதம்படும் நேரென பாவத்தின் .சம்பளம்.

பொய்யும் புரட்டுடன் போக்கிரி ஊழலும்
செய்யும் அரசியல் சீர்கெடு போலிகளாம்.
மெய்கள் மடியவும் மின்பொறி வாக்களித்தும்
கைகள் கறைபட கற்றதும் பயம்தானோ!

தீவினை கண்டும் திடம்படா மனமே!
நேர்வினை அஞ்சும் நிசமில் குணமே!
ஊழ்வினை என்ன உனக்கது சொல்மோ?
ஆள்வினை நெஞ்சம் அறிவில் பயமோ?

அடிமை பழகிநீ அஞ்சியே வாழ்ந்தாய்].
மடிமை முழுகிநீ கெஞ்சியே தாழ்ந்தாய்
தலைமை படிந்துநீ தன்னையே இழந்தாய்
நிலைமை பயந்துநீ நிழலாய் அலைந்தாய்.

பயந்து கிடந்துறு பாவம் அறிந்தும்
தயங்கி எதிர்வினை தான்முய லாதும்
முயன்றுநீ சாவதாய் முடிந்தும் இறந்தபின்
இயன்றுநீ வாழ்வதென் இருக்கும் பிணமே!

பயந்து பணிந்தினி பாழ்பட வேண்டாம்
தயங்கித் துணிவினில் தாழ்வுற வேண்டாம்.
இறப்ப தொருநாள் உறுதியுறுதி என்றாம்
பிறப்ப தினியில்லை பேய்களை ஓட்டுவோம்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment