Tuesday, 26 August 2014

சும்மா இல்லை அம்மா.

புதிய கீதை 7 (சும்மா இல்லை அம்மா)

அம்மா என்றே உயிர் உள்ளே
ஆன்மா அதிரும் தமிழ் சொல்லே.
சும்மா சொல்லும் சொல்லல்ல
சொந்தம் எல்லாம் அதனுள்ளே.

அம்மா எல்லாம் தந்தாளே
அவளே கடவுள் அன்பாலே.
சும்மா இல்லை உறவாலே.
சுகமே அவளுக்கு நான்தானே.

அம்மா என்னைக் கண்டாளே,
அன்றே இன்பம் கொண்டாளே.
சும்மா எனக்கும் பேரில்லை.
சொப்பனம் வளர்த்தாள் தூங்கவில்லை.

அம்மா மனமே நான்தானே .
அவளுக்குள் இருப்பதும் வேறென்ன?
சும்மா அவளும் தூங்கவில்லை.
சுவர்க்கம் படைத்தாள் கனவுள்ளே.

அம்மா வாழ்ந்ததும் எனக்காக.
அவளுக்குள் உயிரும் நானாக.
சும்மா அவளும் உண்ணவில்லை.
சொறிந்தால் அதையே பாலாக.

அம்மா சிந்திய வேர்வையிலே
அடியேன் குளித்தேன் அறிவியிலே!
சும்மா என்னைப் பார்க்கவில்லை.
சூரிய ஒளியாய் ஆக்கிவிட்டாள்.

அம்மா வளர்ந்து உயர்ந்தாளே.
அவளை மிஞ்ச மகிழ்ந்தாளே.
சும்மா இல்லை அவள்கனவு.
சுற்றம் போற்ற செய்தாளே.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment