Thursday, 14 August 2014

உரிமை நாள்



உரிமை நாள்!

வெந்தணல் பூத்த விளைவா யெழுந்து—தீவிர
செந்தீ வார்த்த சீற்றஞ் சிவந்து
வெப்பம் தாளாமல் வெள்ளைய ரகன்று—உரிமை
வீரம் வென்ற நாளின்று.

இந்தியக் கண்டம் காந்தியா வென்று—பழமை 
சந்ததி மலர்ந்த  நாளின்று.
என்றும் வயதும் இல்லையே—வளமை
காந்திய நாடே வாழ்கவே!

கருணைக் கடலெனச் சிறந்தன்றுஇயற்கை
பொருட்கொடை நீயே தாய்தானன்று. .
உரிமை மீட்டாய் உயிர்கள் ஈந்துமக்கள்
ஒருமை ஈட்டிய காந்தியம் நின்று.
.

தாயே என்னும் பந்தமுண்டுஅன்பின்
தாராள மடியின் சொந்தங்கொண்டு.
பேதம்பேணா குணமே நன்றுபண்பின்
பெருமை சொன்னது நீயென்று...

புரட்சி என்றொரு சொல்லுண்டுஅதுஉன்
புகழுக் கென்றே நின்றதன்று
புரட்சி என்ற முயற்சிகொண்டு—அஹிம்சை
வலிமையான மந்திரம் கண்டு.

சுதந்திரம் முயன்று பெற்றதுண்டுஅதுவே
சுயநல சுரண்டல் ஆனதின்று.
ஜனநாயகமே பொய்யான தென்றுஉலகின்
சரித்திர அடையாளம் ஆனதின்று..

பொதுவாழ் வென்ற பேச்சுண்டுஅது
பொது ஜனத்தின் தூரமின்று..
அரசியல் நன்று படித்ததுண்டுசாணக்ய
அர்த்த சாஸ்திரம் மாறுகொண்டு.

அரசியலொரு தர்ம மென்றுஆண்ட
அறவழிப் பாடம் கொண்டதன்று..
அரசியல் ஆனது வணிகமென்றுஅய்யோ
அருமை மாறிப் போனதின்று.

நவயுகம் வார்த்தை நலமுண்டுஅதுவும்
நடப்பினில் நிறைந்தால் மிகநன்று..
ஊழல் தானே ஒழியுமன்றுகணினி
ஆளும் நுட்பம் அமைதலன்று. 

காந்தி ராஜ்ஜியம் காண்பதுண்டுஅவரவர்
கடமை உணர்ந்தால் அமைதியுண்டு.
பரதம் ஒருநாள் ஆவதுண்டு.அன்று
பழமை சிறப்பு பெறுதலுண்டு.

வேற்றுமை போற்றும் சக்திகொண்டு—ஒன்றில்
ஒற்றுமை கூட்டினால் உயர்வுண்டு.
ஆற்றும் பல்வழிக் கூட்டொன்று—திரண்டு
ஏற்றும் நல்வழி சுபமுண்டு.

எனக்கும் கூடஓர் ஆசையுண்டுஅதுஉன்
எதிர்காலம் வல்லரசா வதுகண்டு.
அன்று எனது முக்தியுண்டுஅந்நாள்
அனைத்தும் ஒன்றில் சக்தியுண்டு.
. 
கொ.பெ.பி.அய்யா.



  




No comments:

Post a Comment