மழையே வா!{குழந்தைப் பாடல்)
மழையே மழையே வா மழையே!
மண்ணில் ஈரம் தா மழையே!
விளையும் நிலத்தை சேறாக்கு
உழைக்கும் மனிதற்கு சோறாக்கு.
கோடி கோடிக் கால்கள் கொண்டு
கூடி ஆடு மழையே நன்று .!
வாடி வறண்ட நதிகள் நிறைந்து
ஓடுங்கள் நீங்கள் கரைகள் புறண்டு.
வானில் மிதக்கும் மேகங்களே ஏன்
வீணில் சுமக்கும் நீராவி தான்
கானில் குளிர்ந்து கொட்டுங் களேன்
மாநிலம் செழிக்கச் செய்யுங் களேன்
கைகள் கோர்த்து ஆடலாம் வாருங்கள்
மெய்கள் நனைந்து பாடலாம் சேருங்கள்.
காகிதக் கப்பல்கள் போகுது பாருங்கள்.
கடலுக்குள் சேருமுன் அணைகட்டி காருங்கள்
மழைபெய்த நீரெல்லாம்
மண்ணுக்குள் புதையட்டும்.
நுழைந்துமே ஊரெல்லாம்
தண்ணிக்கு செழிக்கட்டும்.
ஆறெல்லாம் அணைகட்டி
காடெல்லாம் கழனியாய்
நாடெல்லாம் வளமாக
நாம்வாழ்வோம் நலமாக.
மழையே மழையே வா மழையே!
மண்ணில் ஈரம் தா மழையே!
விளையும் நிலத்தை சேறாக்கு
உழைக்கும் மனிதற்கு சோறாக்கு.
கோடி கோடிக் கால்கள் கொண்டு
கூடி ஆடு மழையே நன்று .!
வாடி வறண்ட நதிகள் நிறைந்து
ஓடுங்கள் நீங்கள் கரைகள் புறண்டு.
வானில் மிதக்கும் மேகங்களே ஏன்
வீணில் சுமக்கும் நீராவி தான்
கானில் குளிர்ந்து கொட்டுங் களேன்
மாநிலம் செழிக்கச் செய்யுங் களேன்
கைகள் கோர்த்து ஆடலாம் வாருங்கள்
மெய்கள் நனைந்து பாடலாம் சேருங்கள்.
காகிதக் கப்பல்கள் போகுது பாருங்கள்.
கடலுக்குள் சேருமுன் அணைகட்டி காருங்கள்
மழைபெய்த நீரெல்லாம்
மண்ணுக்குள் புதையட்டும்.
நுழைந்துமே ஊரெல்லாம்
தண்ணிக்கு செழிக்கட்டும்.
ஆறெல்லாம் அணைகட்டி
காடெல்லாம் கழனியாய்
நாடெல்லாம் வளமாக
நாம்வாழ்வோம் நலமாக.
.jpg)
No comments:
Post a Comment