Sunday, 6 April 2014

சரணம் சபரிமலை.

சபரிமலை சரணம்

சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடும் ஆ
சாமி நானப்பா.
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
துள்ளித் துள்ளி ஆடிக்கிட்டு
சரணம் சொல்லி பாடிவாறேன்
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
பதினெட்டுப் படியேறி
கதியென்று உனைவேண்டி
அருளென்று புகழ்பாடி’
உன்விரதம் ஏற்றுக்கொண்டு
உன்சபதம் போற்றிக்கொண்டு
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!

உன் சரணம் கூறிக்கொண்டு
உச்சிமலை ஏறிக்கொண்டு
எண்ணமெல்லாம் உன்னைக்கொண்டு
என்னிலுனைக் கண்டுகொண்டு
தூயவனாய் நேயம் பெற்று
மாயையிலா மனிதம் பெற்று
சமத்துவத்தைப் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!
துளசிமாலை சத்தியமா சொல்லுவேன்.
கழட்டினாலும் நிச்சயமா கொள்ளுவேன்.
சாமியாத்தான் வாழ்ந்தும் காப்பானே!
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment