Sunday, 6 April 2014

தமிழ் கடவுள்.

தமிழே அழகே வாராய்.

தமிழே அழகே வாராய்.
அமுதே உயிரே வாராய்
உலகின் முதலே மொழியே –தமிழ்
நிலவும் இறையே வாராய்.

உயிர் பனியிரண் டெழுத்தினை
விழி பனியிரண் டெனக்கொண்டனை
அஃகெனும் மெய்யொற்று  சிறப்பினை

ஆயுதமாய்க் கைக்கொண்டாய் வேலினை

செந்தூர் திருவடி வேலவனே
சிந்தை நிறைஉறை ஆனவனே
வந்தருள் செய்வாய் கந்தனே-மனம்
நின்றென்னில் வாழ்வாய் குன்றனே.

தமிழ் சொந்தம் காக்க முருகா!
திருச் செந்தூர் ஆக்கின அழகா!!
சூரனை வென்ற வேல்  முருகா!--தமிழ்
வீரனாய் நின் ற வடிவேலவா.!
.
மலர்களாய் தாமரை ஆறாய்
மலர்ந்தாய் சிவனின் கூறாய்
அணைத்தவள் கார்த்திகை சீராய்—தமிழாய்
இணைந்தாய் அழகெனப் பேராய்.

இழிவெனச் சாதி இலையே
மலைமகள் வள்ளி கணவா.
கலந்தாய் குறக்குல மருகா—தமிழே
துணிந்தாய் கடந்தாய் தலைவா.


கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsuZv0Ix3CXzLeYQRMVeVNZXMWZ37cRQjzRCb2heslHV0KpxL17VD56gddm26VorPs1aYa0mNzw1GOhJ7iU1RHUI4WNRmmDnmTQdlKiSlJLzw110UATD3OzML8wzp6-5eqO_gjrtsJuqU/s1600/10168927_1488396028048291_433705842_n.jpg

No comments:

Post a Comment