Monday, 7 April 2014

முன்னை ளுதல்வனே!

முன்னை முதல்வன்

முன்னை முதலோனே மூஞ்சூர் வாகனனே!
அன்னை முகம்போலே பெண்ணும் தேடுபவனே!
உன்னைத் தீண்டாது ஊழ்தோற்றான் சனியனோ
என்னையும் அண்டோனோ உன்னைவலம் வந்தேனே!

வேழ முகத்தானே வேலன் மூத்தோனே
ஞால முதல்வனே ஞானப் பழத்தோனே
வாழும் உயிர்யாவும் போற்றும் அருளோனே
ஆளும் தொழில்கூட்டும் யோகப் பொருளோனே.

வினைகளுக் கெல்லாம் விநாயகப் பெருமானே!
துணைசெயுந் தெய்வம் !.
கணங்களின் பதியே கணபதி உனையே
குணங்களில் பதிந்தால் குறையொன்று மிலையே!

ஈசனின் மைந்தா நாசங்கள் நைந்தா
வாசல் அமைந்தால் மோசங்கள் தீண்டா.
ஆசான் உனதருள் வாசகம் மெய்ப்பொருள்
தேசம் உணர்ந்தால் நேசம் கைப்பொருள்.

கொ.பெ.பி.அய்யா.  




No comments:

Post a Comment