Friday, 4 April 2014

கண்ணாடி

கண்ணாடி

கண்ணாடி என்னதான்  காட்டுது?
முன்னாடி உண்மைதான் பேசுது.
பண்ணாடி உன்னிடம் மாட்டுது.
பின்னாடி எண்ணிடம் கூசுது.

அகத்தினில் உள்ளதை வரையுது
முகத்தினில் சொல்வதை நிறையுது.
நிசத்தின் உன்முகம் மறையுது.
வசத்தின் உன்னகம் கரையுது.

எண்ணம் குளிர்ந்த உணர்ச்சியை.
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை.
வண்ணம் கவர்ந்த நெகிழ்ச்சியை
சொல்லும் வதனம் மலர்ச்சியை.

இன்பம் துன்பம் எதுவாலும்
எண்ணும் வண்ணம் இரண்டாலும் 
இதயம் உள்ளும்  வகையாலும்
எழுதிச் சொல்லும் முகத்தாலும்.

கோபம் தாபம் குணங்களில்
குழம்பிக் கிடக்கும் அவசரத்தில்
பாவம் புண்ணியம் தெளிவதில்
ஆர்வம் முன்னம் முகவரியில்.

தெளியா மனதினில் தேடாதே!
விழியா உணர்வினில் ஊடாதே!
புரியா மொழியினில் பாடாதே!
அறியா முகத்தினில் கூடாதே!

கண்ணாடி முன்னின்று தனைத்தேடு!
தன்னாடி தன்னின்று தனையூடு!.
எண்ணாடி எண்ணின்று தனைப்பாடு!.
ஒண்ணாடி உண்ணின்று தனைக்கூடு.

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglR6OjOme3gtDfmhw5ofd4mClBjU-e7x_47cEjKQ4CbDiVFD_wtwN4wH1nXJwyWUfKG3FDzNsc04bI2UMZSmQPGkd-TzxcF_fv9dszpawNIWLfCvaS8C98IKdi0yYi6L-0W1G8V9sEsEs/s1600/images+(18).jpg















No comments:

Post a Comment