Thursday, 7 January 2016

மூச்சாறும் தமிழ்.

மூச்சு ஆறும் தமிழ்.

தாயினை தள்ளி வைத்தார்.
நாயினை பள்ளி வைத்தார்
கோவிலை மூடிவைத்து-தமிழ்
தேவியை ஈடு வைத்தார்.

முக வரியை மாற்றுகிறார்.
தக வியல்பை நீற்றுகிறார்.
சுயமதனை இழந்துமே-தமிழ்
தய வதனை தூற்றுகிறார்.

பயின்ற வழி அழிக்கிறார்.
முயன்ற விழி பழிக்கிறார்.
இயன்றதை துறந்துமே-தமிழ்
உயர்ந்த மொழி இழிக்கிறார்.

தன்னி யமும் வெறுக்கிறார்.
மண்ணி யமும் மறுக்கிறார்.
அன்னியம் நன்னியமோ--தமிழ்
புண்ணி யமும் துறக்கிறார்.

மெல்லவும் மூச்சு தேறும்.
வெல்லவும் பேச்சு ஆறும்.
குஞ்சொன்று அக்கினி-தமிழ்
விஞ்சென்று அது மீறும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment