தமிழே நீ சொல்லு!
தாயே!தகையே!தமிழே நீ சொல்லு!
தந்திரம் மந்திரம் எல்லாம் தள்ளு!
சாயா நீதியின் சாத்திரம் கற்ற நீ!
உந்திறம் கண்டுமே உற்றது தேர்நீ!
தர்மம் நாடாளும் தமிழின் புண்ணியம்.
மர்மம் தான்நாளும் மரத்தது கண்ணியம்.
நாமே நாமாரும் நமக்கென எண்ணியும்,
யாரே!யாமாரும் நமக்கிணை திண்ணியம்.
தந்தை புரட்சியார் தாயோ!நாச்சியார்.
சிந்தை நிறைத்தவர் செத்தனர் மாட்சியார்!
சந்தை அரசியலில் சத்தியர் உண்டோசொல்!
முந்தை வரமதனில் முயன்றது சண்டாளமோ!
காந்தியும் காமராசும் கண்டபொன் சிகரங்கள்.
இந்தியா பெற்றதும் எந்தமுன் தவங்களோ!
மந்தியா பிந்தின மந்தைதன் அவலங்கள்.
நிந்தியா நிற்றதும் எந்தைபின் எதுவுங்கள்?
தேனார் சோதிக்க தீராய்வும் தேவையோ!
தூணார் சாதிக்க தேறுவதும் தேரவோ!
வீணார் ஓதுவார் வென்றபின் ஒதுக்குவார்.!
தானார் காட்டுவார் தன்தொழில் பெருக்குவார்..
கொ.பெ.பி.அய்யா.
தாயே!தகையே!தமிழே நீ சொல்லு!
தந்திரம் மந்திரம் எல்லாம் தள்ளு!
சாயா நீதியின் சாத்திரம் கற்ற நீ!
உந்திறம் கண்டுமே உற்றது தேர்நீ!
தர்மம் நாடாளும் தமிழின் புண்ணியம்.
மர்மம் தான்நாளும் மரத்தது கண்ணியம்.
நாமே நாமாரும் நமக்கென எண்ணியும்,
யாரே!யாமாரும் நமக்கிணை திண்ணியம்.
தந்தை புரட்சியார் தாயோ!நாச்சியார்.
சிந்தை நிறைத்தவர் செத்தனர் மாட்சியார்!
சந்தை அரசியலில் சத்தியர் உண்டோசொல்!
முந்தை வரமதனில் முயன்றது சண்டாளமோ!
காந்தியும் காமராசும் கண்டபொன் சிகரங்கள்.
இந்தியா பெற்றதும் எந்தமுன் தவங்களோ!
மந்தியா பிந்தின மந்தைதன் அவலங்கள்.
நிந்தியா நிற்றதும் எந்தைபின் எதுவுங்கள்?
தேனார் சோதிக்க தீராய்வும் தேவையோ!
தூணார் சாதிக்க தேறுவதும் தேரவோ!
வீணார் ஓதுவார் வென்றபின் ஒதுக்குவார்.!
தானார் காட்டுவார் தன்தொழில் பெருக்குவார்..
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment