கடிதம் ஒன்று வந்தது.
கடிதம் ஒன்று வந்தது.
காற்று வந்து தந்தது.
படிக்கும் போது பறந்தது.
பாட்டாகக் கலந்தது.
எழுதாத எழுத்தது.
இயற்றாத பொருளது.
வடிக்காத வரியது.
முடிக்காத கவிதையது.
உயிரான உயிரது
உயிருள்ள உணர்வது.
ஆன்மாவின் வடிப்பது
ஆன்மாவுள் துடிப்பது.
வேதமெனும் பதிவது
வீரியத்தின் விதியது.
காதலெனும் திருவது,
காலத்தின் கருவது.
கொ.பெ.பி.அய்யா.
கடிதம் ஒன்று வந்தது.
காற்று வந்து தந்தது.
படிக்கும் போது பறந்தது.
பாட்டாகக் கலந்தது.
எழுதாத எழுத்தது.
இயற்றாத பொருளது.
வடிக்காத வரியது.
முடிக்காத கவிதையது.
உயிரான உயிரது
உயிருள்ள உணர்வது.
ஆன்மாவின் வடிப்பது
ஆன்மாவுள் துடிப்பது.
வேதமெனும் பதிவது
வீரியத்தின் விதியது.
காதலெனும் திருவது,
காலத்தின் கருவது.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment