Saturday, 9 January 2016

இரவே இனிமை.

இரவே இனிமை

இரவே இனிமை -அதில்தான்
தனிமைக்கு உரிமை.
அமைதியின் சுகவாசம்
இரவில்தான் பிரவேசம்.
ஆன்மாவின் உறவு
இரவில்தான் வரவு.
உழைத்தவன் வாசம்
இரவில்தான் நேசம்.
களைத்தவன் ராஜ்ஜியம்
இரவில்தான் பூஜ்யம்.
நினைவுகள் மறக்கும்
இரவுகள் இனிக்கும்.

தொலைந்த நாகரீகம்
கலைந்த பண்பாடு
சிதைந்த பழைமை
புதைந்த வழமை
மறைந்த அருமை
நிறைந்த சிறுமை
இதுதான் நிலைமை
இன்றைய புதுமை.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment